திருவாரூர் சரவணன்
கட்டுரை
22–03–2019
முறைப்படி சம்பளப்பட்டியல்
மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும்
அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் வரிப்பிடித்தம்
என்று சொல்வார்கள். 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையை இன்றும் திருத்தம் செய்வதற்கு
அவசியமிருக்கவில்லை.
மாற்றம் ஒன்றே
மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே
இருக்கிறது.
கையெழுத்து போட்டு
சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான
வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு
பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு
முன்பே பெரும்பாலானவர்கள் அறிந்த விசயம்தான்.
நண்பர் ஒருவர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பள்ளித்தோழன் என்று கூறி நண்பரின்
அம்மாவிடம் பேசியிருக்கிறான்.
‘‘எனக்குத் தெரிஞ்ச
கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்- ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்
தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு
வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.
நண்பரின் அம்மாவுக்கோ,
புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் நண்பர்கிட்ட
சொல்லியிருக்காங்க. நண்பருக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.
போட்டித்தேர்வுல
பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நண்பரோ பத்தாம் வகுப்பு,
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட
சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து
மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தாகத்துக்கு தண்ணி கூட குடிக்க மாட்டாங்கன்னு
நண்பருக்கு தெளிவா புரிஞ்சது.
அப்துல்கலாம்
ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி நண்பர் தனது அம்மாவோட கனவை கலைச்சுட்டு
மறு நாள் பள்ளித்தோழனை பார்க்கப் போயிருக்கார். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம
நிராகரிக்கிற பழக்கம் அந்த நண்பருக்கு கிடையாது.
அந்த அரசு அலுவலகத்துல
இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.
ஒழுங்கா கையால
எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு
எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள
மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொல்லியிருக்கார்.
அவ்வளவு வேலை
பாக்கி இருந்தது. நண்பரின் பணித்திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்திருக்கார். ஆறு
மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தாமுப்பது வேலை நாள் தேவைப்படும்.
எவ்வளவு சார்
தருவீங்க. வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேள்வி எழுப்பியிருக்கார்.
இங்க வேலை பார்க்குற
ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால
வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம்.
இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல
சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசியிருக்கார்
அந்த ஆபிசர்.
நண்பருக்கு விஷயம்
புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு
கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது
அவங்க எண்ணம்.
நண்பர் ஒரு நாளைக்கு
நூற்றைம்பது ரூபா கேட்டிருக்கார். (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு) ஆனா அவங்க ஐம்பது
ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நண்பரும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா
இல்லை. அந்த துறை மட்டுமில்ல. நண்பருக்கு தமிழ் -ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ்
எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டிருக்காங்க. எல்லாம்
மார்ச்சு ஜூரம்தான்.
நண்பருக்கு அவங்க
மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி
ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சிகிட்டார். இன்னும் சில இடங்கள்ல பல பணியிடங்கள் நிரப்பப்படாம
இருக்குறதாலயும் பணிகளை உரிய காலத்துக்குள்ள முடிக்க முடியாத அளவுக்கு கஷ்டம். ஆனா
கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் அந்த நண்பர்
பார்த்திருக்கார்.
சில பழமைவாதிங்க
புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால
இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை
ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில தவறுகளை செய்துகிட்டு இருப்பாங்க.
எல்லா ஊர்லயும்
அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம்
புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா
இருக்காங்க.
பலருக்கு இந்த
அனுபவம் இருக்கும். நண்பர் எஸ்கேப் ஆயிட்டாரு. ஆமா, இந்த அலுவலர்கள் மறு வருஷம் என்ன
செய்வாங்க.
சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு
தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு
அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும்
சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.
No comments:
Post a Comment