அப்டியா?
திருவாரூர் சரவணன்
22–03–2019
திருவாரூர் பெரிய
கோவில் தெப்பக்குளம் பகுதியில் 80 வயது பெரியவரும் 7 வயது சிறுவனும்...
‘தாத்தா... கமலாலயகுளக்கரையை
விட்டுட்டு துர்க்காலயா ரோட்டுல ஏன் தெப்ப மண்டபம் கட்டியிருக்காங்க?’
‘1956ஆம் வருசம்
வரைக்கும் துர்க்காலயா ரோட்டுல தெப்பமண்டபத்துக்கு எதிர்ல இருக்குற குளத்துலதான் தெப்பம்
ஓடியதாம். அதுவும் ஒருநாள் மட்டும்.
அதுக்கப்புறம்
என்ன காரணங்களாலேயோ தெரியலை, கமலாலயத்துல 3 நாள் திருவிழாவா மாறிடுச்சுன்னு சொல்றாங்க...
உண்மை அந்த தியாகேசனுக்குதாம்பா
தெரியும்...’
‘அப்டியா தாத்தா?’
(உறுதிப்படுத்தப்படாத ஆனால் உண்மையாகவும் இருக்குமோ என்று எண்ணக்கூடிய செய்திகள் அப்டியா தாத்தா பகுதியில் இடம்பெறும்.)
No comments:
Post a Comment