திருவாரூர்
சரவணன்
22–03–2019
நான் 1995 வாக்கிலேயே
9ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கதை எழுத முயற்சித்தாலும் 2001ல் இவரது எப்படி
கதை எழுதுவது?" என்ற புத்தகம் படித்த பின்புதான் பத்திரிகைகளில் பிரசுரமாகும்
அளவுக்கு நான் எழுத கற்றுக்கொண்டேன்.
ரா.கி.ரங்கராஜனின்
எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தைப் படித்த பின்புதான் எனக்கு கதை எழுதும் உத்திகள்
ஓரளவு பிடிபட்டது. டெக்னிக்கலாக அதாவது கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும்.
எவை எல்லாம் இருக்க வேண்டும். எது கூடாது என்று எளிமையாக சொல்லித்தரும் கையேடு என்று
எப்படி கதை எழுதுவது புத்தகத்தைக் கூறலாம்.
எழுத்தாளர்
பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும்
ஸ்கிரிப்டை படித்துப்பார்க்க விரும்புவதில்லை. முதல்ல கதையோட "நாட்" என்னன்னு சொல்லுங்கன்னு
கேட்பாங்க. அது நல்லா இருந்ததுன்னா மொத்த கதையையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்பாங்க...
என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment