நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 28, 2019

ஏ/சி, பிரிட்ஜ் - எச்சரிக்கை தேவை


மின்னழுத்த மாறுபாடு காரணமாக பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்து வயர்கள், அருகிலிருந்த பிளாஸ்டிக் கதவுகள் கருகியதாலும், பிரிட்ஜில் இருந்த வாயுக்கள் வெளியேறியதால் அவற்றை சுவாசித்த மூன்று பேர் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள். கார், வீடு போன்ற இடங்களில் குளிர்ச்சாதன வசதிக்காகவும், கொசுத் தொல்லை காரணமாகவும் வெளிக்காற்று கிடைக்காத அளவுக்கு ஜன்னலை அடைத்து விட்டு உறங்குவதுதான் இத்தகைய நச்சு வாயுக்கள் தாக்கி உயிரிழக்க உப காரணமாகி விடுகிறது. எனவே நம் பாதுகாப்பின் மீது கவனமாக இருப்போம்.

No comments:

Post a Comment