படைப்புகள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 15-06-2019
அறிவிப்பு
முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசு ரூ.7,500/-
மூன்றாம் பரிசு ரூ.5,000/-
இந்த பரிசுகள் மட்டுமல்லாது, பிரசுரத்துக்கு தேர்வாகும் ஒவ்வொரு
கதையும் சன்மானம் பெறும். ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
விதிமுறைகள்:
1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு (2,000 வார்த்தைகளுக்கு)
மிகாமல் இருப்பது நல்லது.
2. சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும்.
அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டா.
3. முழு வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
4. மின்னஞ்சலில் கதைகள் அனுப்புவோர் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்
போட்டி 2019 என்று குறிப்பிட்டு kalki@kalkiweekly.com
என்ற முகவரிக்கு அனுப்பவும். யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே கதைகளை அனுப்புங்கள்.
5. போட்டிக்கு அனுப்பும் கதையைத் திருப்பி அனுப்ப இயலாது. கதையின்
பிரதியை நீங்கள் வைத்துக் கொள்ளவும்.
6. முடிவுகள் வெளியாகும் வரை போட்டிக்கான கதையை வேறு இதழுக்கோ
இணையதளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ அனுப்பக்கூடாது.
7. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும்.
சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி.
8. முடிவுகள் வெளியாகும் வரை, எவ்வித கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி,
மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.
9. மின்னஞ்சலில் கதைகள் அனுப்புபவர்கள், கல்கி இதழ் பார்த்து
போட்டியின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2019 என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப
வேண்டிய முகவரி: ஆசிரியர், கல்கி, கல்கி பில்டிங்க்ஸ், 47 - NP, ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல், சென்னை - 32.
கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி : ஜூன் 15, 2019.
போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் ஆகஸ்ட் 4, 2019 ஆண்டு
மலரில் வெளியாகும்.
படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து
கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.
No comments:
Post a Comment