நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 19, 2019

அங்கீகாரம்

ஆடியோ ரிலீஸ் ஆனதும் அந்தப் பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று திரைஉலகம் மட்டுமல்ல...படத்தை உருவாக்கியவர்களே எதிர்பார்க்கவில்லை. பாடல் ஹிட் ஆனதையடுத்து ஆங்கில பாப் பாடகரே வலிய வந்து மிகக்குறைவான சம்பளத்தில் ஆடித் தர சம்மதித்தார்.
உடனடியாக தயாரிப்பாளரும் வெளியில் கடன் வாங்கி ஏற்கனவே படம் பிடித்த பாடல் காட்சியை மீண்டும் ஆங்கில பாப் பாடகரை வைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்தார்.
படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. "தமிழ் நடன நடிகரை வைத்து ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை சேர்க்க வேண்டாம்"என்று தயாரிப்பாளர் சொன்னார்.
'அந்த பாடலுக்காக பதினைந்து நாள் உழைத்த நடனக் கலைஞனுக்கு  நாமதான் பணம் கொடுத்தாச்சே...பிறகு பாடலை சேர்ப்பது பற்றி ஏன் கவலைப் படணும்?...யாரும் எதுவும் சேர்க்க மாட்டாங்களே...'என்பது தயாரிப்பாளரின் வாதமாக இருந்தது.
"சம்பளம் கொடுத்ததோட நம்ம பொறுப்பு முடிஞ்சிட்டதா யார் சொன்னா? ஒரு கலைஞனுக்கு ஊதியத்தைவிட பெரிசா நினைக்கிறது ரசிகர்களோட கை தட்டலைத்தான். அது அவருக்கு கிடைக்கனும்னா பாடலை படத்துல சேர்த்து மக்களோட பார்வைக்கு கொண்டு போகணும்.
இது தான் நம்ம கடமை. அந்தப் பாட்டை எங்க சேர்க்குறதுன்னு குழப்பமே வேண்டாம்...கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் பாட்டோட எண்ட் டைட்டிலை ஓட விட்டுடலாம்." என்று இயக்குனர் சொன்னதில் இருந்த மனிதநேயம் புரிந்ததால் தயாரிப்பாளர் மகிழ்வுடன் சம்மத்தார்.
-திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment