அனில் கும்ளே
ஒரே இன்னிங்க்ஸ்-ல் 10 விக்கெட் வீழ்த்தியது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
அவரை அந்த
சாதனை படைக்க வைப்பதற்காக ஸ்ரீ நாத் மறு முனையில் விக்கெட் விழாதவாறு பந்துவீசுவது
மிகவும் கடினம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
பெரியவர்களாக
இருந்து கொண்டு சிறு குழந்தைகளுக்காக கதை எழுதுவதும் அதைப் போன்ற கடினமான ஒன்றுதான்.
2019 ஆம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை குழந்தைகளுக்கான சிறுகதைப்
போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விபரம்
ஏப்ரல் 15 தேதிக்கு பிறகுதான் தெரிய வந்தது. அதனால் அவசரமாக முயற்சி இரண்டு கதைகள்
எழுதி இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
வாய்ப்பு
இருப்பவர்கள் மே 10, 2019க்குள் சிறுவர்களுக்கான கதைகள் எழுதி சமர்ப்பிக்கலாமே...
***
கல்கி வார
இதழ் அறிவித்துள்ள சிறுகதைப் போட்டிக்கு கடைசி நாள்: 15–06–2019
******
ப்ரதிலிபி
இணையதளம் அறிவித்துள்ள மர்மம்/சஸ்பென்ஸ்/த்ரில் சிறுகதைப் போட்டிக்கான கடைசி தேதி
05–05–2019
No comments:
Post a Comment