சேக்ஸ்பியர்
பிறந்த தினம் மற்றும் சில எழுத்தாளர்களின் நினைவுதினமான ஏப்ரல் 23ஆம் தேதியானது உலக
புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு
வருகிறது.
எனது மகனின்
3ஆம் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று காலையில் அங்கன்வாடியில் சக குழந்தைகள் மத்தியில்
கொண்டாடிவிட்டு, மதியம் திருவாரூர் மாவட்ட மைய நூலகத்திற்கு அப்துல்கலாம் எழுதிய நூல்
ஒன்றை நன்கொடையாக வழங்கி விட்டு வந்தோம். இரண்டரை வயதில் இருந்தே எங்கள் மகனை நூலகம்
அழைத்துச் சென்று புத்தகங்களுடன் பழக விட்டு வருகிறோம். ஒழுக்கத்துடனும் பண்புடனும்
வளர ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல புத்தகங்களும் மிக முக்கியமான நண்பர்களாயிற்றே...
–திருவாரூர்
சரவணன்
No comments:
Post a Comment