இந்த ஆண்டும்
12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் ஒரு மாணவி ரயில் முன்பு பாய்ந்து
உயிரை இழந்திருக்கிறார்.
இழந்தால் திரும்ப
பெற முடியாது என்று காலம், உயிர் அது இது சிலவற்றை என்று குறிப்பிடுவார்கள்.
இதில் பிறவற்றைப்
பற்றி பிறகு பேசலாம். அந்த மாணவி மதிப்பெண் குறைந்ததால் விரும்பிய படிப்பில் சேர முடியாமல்
போயிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு துறையில் இன்னும் பிரமாதமாகவே சாதித்திருக்க வாய்ப்பு
இருந்திருக்கும்.
இப்போது உயிரை
இழந்திருப்பதால் எதற்கும் வழியில்லை. பெற்றோரின் கண்ணீர்தான் மிச்சம்.
உயிர் முக்கியம்
குழந்தைகளே... அது இருந்தால் நம்முடைய முயற்சியினால் நமக்கும் உலகத்துக்கும் பயனுள்ள
பல சாதனைகள் செய்யலாம்.
நேர்மையாக வாழ்வில் உயர
ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாய்ப்புகள் உண்டு என்று பெற்றோரும், ஆசிரியர்களும்,
அக்கம் பக்கத்தினர்களும் மாணவர்கள், மாணவிகளை மனம் தெளிய வைக்க வேண்டியது காலத்தின்
கட்டாயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment