நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 19, 2019

அடவி / திகில் / மர்மம் / சஸ்பென்ஸ் கதைகளுக்கான போட்டி


படைப்புகள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 05-05-2019
அறிவிப்பு
வணக்கம்,
மனித மன விசித்திரங்களை அதன் புதிர்களை பேசுவது இலக்கியத்தின் பணிகளில் ஒன்று. அதிலும் திகில், மர்மம், சஸ்பென்ஸ், திரில்லர் வகை கதைகள் அவற்றை முதன்மையாக பேசும் வகைமை. பிரதிலிபியின் அடுத்த போட்டி அதனை ஒட்டியே நடைபெறவிருக்கிறது.
மர்மங்கள், பேய்க்கதைகள், கொலை குறித்த சஸ்பென்ஸ் கதைகள், அமானுஷ்யங்கள், பழி வாங்குதல், விசாரணைகள் என பரந்துபட்ட வகைகளின் கீழ் போட்டிக்கு கதைகள் எழுத அழைக்கிறோம். கதைகள் குறிப்பிட்ட வகைமையின் கீழ் வரவேண்டும்(திகில், மர்மம், சஸ்பென்ஸ், திரில்லர்).பிரதிலிபி எழுத்தாளர்களுடன், இந்த முறை பிரதிலிபி வாசகர்களையும் அதிக அளவில் கதைகள் எழுத அழைக்கிறோம்!
போட்டிக்கு கதைகள் மட்டுமே சேர்க்க இயலும். படைப்புகளை சேர்க்கவேண்டிய கடைசி நாள் - மே 5, 2019. போட்டிக்கு வந்த படைப்புகள் மே 8ஆம் தேதி வாசகர் பார்வைக்கு வைக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் அன்றே தெரிவிக்கப்படும்.
பரிசுத்தொகை :
மொத்தம் 10 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஐந்து நடுவரால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஐந்து வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது.
முதல் பரிசு - ரூ.5000
இரண்டாம் பரிசு - ரூ .4000
மூன்றாம் பரிசு - ரூ. 3000
நான்காம் பரிசு - ரூ. 2000
ஐந்தாம் பரிசு - ரூ. 1000
முக்கியமானவை :
1) ஒருவர் அதிகபட்சம் 5 படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்க இயலும். (அதற்கு கீழும் சமர்ப்பிக்கலாம்)
2) நீங்கள் சமர்ப்பிக்கும் படைப்பு உங்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். (வேறு ஒருவருடைய படைப்பை எடுத்து சமர்ப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது)
3) ஏற்கனவே பிரதிலிபியில் வெளியான படைப்புகளை சேர்க்க அனுமதி இல்லை. புதிய படைப்புகளை மட்டுமே சேர்க்க இயலும். (பிற தளங்கள், பத்திரிக்கைகளில் வெளியான உங்களது படைப்புகளை பதிப்பிக்கலாம்)
4) சேர்க்கப்படும் கதைகள் 400 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும். மற்றவை பரிசுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
5) படைப்புகளை போட்டிப் பக்கத்தில் மட்டுமே சேர்க்க இயலும்.
எப்படி பங்கேற்பது?
போட்டிப் பக்கத்தின் கீழே உள்ள 'பங்கேற்க' பொத்தானை அழுத்தி கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ, செயலியிலிருந்தோ படைப்புகளை சமர்ப்பிக்கலாம். படைப்பை அதன் பக்கத்தில் தட்டச்சு செய்யலாம் அல்லது copy - paste செய்யலாம். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் 'உங்கள் படைப்புகள்' எனும் தலைப்பின்கீழ் தெரியும். ஒவ்வோரு படைப்பையும் தனித்தனியே சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் மே 8ஆம் தேதி பிரதிலிபி குழுவால் பதிப்பிக்கப்படும்.
படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதவும். அதிகப் பிழைகள் இருந்தால் பரிசு பெறும் படைப்பாக தேர்ந்தெடுக்கப்படாது. படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.
தொடர்புக்கு – 9206706899.
வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.

No comments:

Post a Comment